பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
அங்காடித்தெரு மகேஷ் - நாடோடிகள் அனன்யா நடித்த படம் இரவும் பகலும் வரும். இரவும் பகலும் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. அந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. ஜெய்சங்கர் நடிப்பில் 1965ல் வெளியான படம். அதே தலைப்பில் படம் எடுத்தால் ஏற்கனவே அந்த தலைப்பில் படம் எடுத்த தயாரிப்பாளர்களிடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த அனுமதியை தற்போது படம் எடுப்பவர்கள் வாங்க வில்லை. எனவே இரவும் பகலும் வரம் என்று படத்தின் பெயர் மாற்றப்பட்டது.
பாலா ஸ்ரீராம் என்ற புதுமுக இயக்குநர் இயக்கிய இப்படத்தை ஸ்கை டாட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. அதை தணிகைவேல் என்பவர் வாங்கி வெளியிட இருந்தார். இரவும் பகலும் வரும் திரைப்படம் இன்று வெளிவருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் படம் வெளிவரவில்லை. மார்ச் 13 வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே ஒரு படம் எடுத்து ரிலீஸ் செய்த வகையில் விநியோகஸ்தர்களுக்கு 10 லட்சம் பணம் தர வேண்டுமாம். இந்த பஞ்சாயத்தில்தான் படம் வெளிவரவில்லையாம்.