ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, தம்பி ராமையா, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கும் 'கொம்பன்' படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. இந்தப் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த 'குட்டிப் புலி' படத்திற்குப் பிறகு முத்தையா இயக்கியுள்ள படம் இது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முத்தையா, “இந்தப் படம் எங்களுடைய குடும்பத்தில் நடந்த ஒரு கதைதான். என்னுடைய அப்பாவுக்கும், அவருடைய மாமனாருக்கும் இடையே நடந்த விஷயங்களைத்தான் படமாக்கியிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே அவர்களைப் பார்த்து வந்ததால் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களைத்தான் படத்தில் வைத்திருக்கிறேன்.
பத்து வருடங்களுக்கு முன்பே இந்தக் கதையில் ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைத்து படமாக எடுக்கும் வாய்ப்பு கூட எனக்கு வந்தது. ஆனால், அந்த மாமனார் 'முத்தையா' கதாபாத்திரத்தில் ராஜ்கிரண்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 'என் ராசாவின் மனசிலே' படத்தைப் பார்த்ததுமே என்னுடைய 'முத்தையா' கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து விட்டேன். அவருக்காகவே காத்திருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ஆனால், இந்தப் படத்திற்கு முன் 'குட்டிப் புலி' படத்தை இயக்கி விட்டேன்.
நான் இயக்கும் படங்கள் அனைத்துமே குடும்ப உறவுகளைச் சொல்லும் படமாகவே இருக்கும். எனக்குத் தெரிந்தவற்றை மட்டுமே நான் எடுப்பேன். தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், என கிராமத்தில் சொலவடை உண்டு. எனக்கு சிட்டி சப்ஜெக்ட் பழக்கமில்லை, கிராமத்துப் பின்னணியில்தான் படங்களை இயக்குவேன்,” என்று உறுதியுடன் சொன்னார் முத்தையா.