ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'கொம்பன்' படம் ராமநாதபுரத்தைச் சுற்றிய கிராமியப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடல்களுமே கிராமிய மணம் வீசும் இசையில் உள்ளது. இந்தப் படத்தில் தனிக்கொடி, மகாலிங்கம் என்ற இரண்டு பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் இருவருமே மேடையேறி அவர்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். அதிலும் மகாலிங்கம் அவருடைய பேச்சில் பாடல் எழுதக் கிடைத்த வாய்பைப் பற்றி கலகலப்பாகப் பேசினார்.
“நான் வீதி நாடகக் கலைஞர். எங்க பகுதியில ஷுட்டிங் நடக்கும் போது வந்து நடிக்கக் கூப்பிடுவாங்க. ஒரு முறை அப்படித்தான் ஒரு படத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. ஹீரோயினுக்கு அண்ணன் நீங்கதான், படமே உங்களை சுத்திதான் நகரும்னு சொன்னாங்க. அப்புறமா போன் பண்ணி 50000 ரூபாய் கொடுங்க, படத்துல நடிக்கலாம்ணாங்க. எனக்கு நாடகத்துல நடிக்கிறதுக்கே பணம் வாங்கித்தான் பழக்கம். பணம் கொடுத்து நடிக்கற பழக்கம் இல்லைன்னு சொல்லிட்டேன்.
இந்தப் படத்துல நண்பர் மூலமா வந்து கூப்பிட்டாங்க. நான் பாட்டுலாம் பாடுவன்னு சொன்னதும் பாடச் சொன்னாங்க. நாலு வரி பாடிக் காட்டினேன். முழு பாட்டை பாடுங்கன்னு கேட்டாங்க. நான் இல்ல மறந்துடுச்சின்னு சொன்னேன். நாம முழு பாட்டைப் பாடிட்டால் அப்புறம் அதை அப்படியே எடுத்துக்கிட்டு நம்ம பேரை போட மாட்டாங்கன்னு அப்படி பொய் சொன்னேன். ஆனாலும், அப்புறமா பாடிக் காட்டினேன். தயாரிப்பாளர், இயக்குனர், கருணாஸ் அவங்கிட்ட பாடிக் காட்டினேன். அப்புறம் போன்லயே மியூசிக் டைரக்டர் ஜிவி சார் கிட்ட பாடச் சொன்னாங்க.
அப்புறம் திடீர்னு ஒரு நாள் வந்து பாடச் சொன்னாங்க. அப்புறமா என் குரல் கார்த்தி சாருக்கு பொருத்தமா இருக்காதுன்னு விட்டுட்டாங்க. நான் பாடிக் காட்டின அந்தப் பாடல்தான் 'கருப்பு நிறத்தழகி....பாடல். வீதி நாடகத்துல நடிச்சிட்ருக்கும் போது கருப்பா இருக்கிற ஒரு பொண்ணு, என்னைப் பார்த்து ஒரு பாட்ட பாட முடியுமான்னு கேட்டுச்சி, அப்ப நான் பாடின பாட்டுதான் அது. இப்ப இந்த 'கொம்பன்' படத்துல இடம் பிடிச்சிருக்கு.
சும்மா சொல்லக் கூடாது, இந்தக் 'கருப்பு நிறத்தழகி...' பாடலும் இனி களை கட்டும் என்பது மட்டும் நிச்சயம்.