ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குனர் மணிரத்னம் ஹீரோவுக்காக கதை எழுதுபவர் அல்ல.. கதையை தயார்செய்துவிட்டு அதற்கு பொருத்தமான ஹீரோவை தேடுபவர். அதனால் தான் அரவிந்த் சாமியை வைத்து நான்கைந்து படங்கள் எடுக்க முடிந்த அவரால் கமலுடனும், ரஜினியுடன் ஒரு படத்திற்கு மேல் பணிபுரிய முடியவில்லை.. அவ்வளவு ஏன் இன்னும் அஜித், விஜய்யை வைத்து கூட படம் பண்ணவே இல்லையே..
அந்த மாதிரித்தான் தற்போது அவரது இயக்கத்தில் வெளியாக உள்ள 'ஓ காதல் கண்மணி' படத்தின் கதையை எழுதி முடித்ததும், முதலில் அவர் மனதில் பளிச்சென்று தோன்றியவர் மலையாள இளம் முன்னணி நடிகரான பஹத் பாசில் தான்.. ஆனால் பஹத் பாசிலுக்கு தமிழுக்கு வருவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. காரணம் தலையில் பாதி முடிகொட்டிப்போன நிலையில் இருக்கும் அவரை தமிழ் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்கிற அச்சம் தான்.
அதை தொடர்ந்து ராம்சரண் தான் மணிரத்னத்தின் அடுத்த சாய்ஸாக இருந்தார். ஆனால் படத்தின் தயாரிப்பளார்களுக்கோ 'அதுக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார்' என்றே தோன்றியதால் ராம்சரணுக்கு அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. மூன்றாவது சாய்ஸ் தான் துல்கர் சல்மான். துல்கரை பொறுத்தவரையில் தன் தந்தை மம்முட்டியைப்போல, தானும் தமிழில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என நினைப்பவர்.. 'தளபதி' மூலம் தன் தந்தைக்கு தமிழில் வழிபோட்டுத்தந்த மணிரத்னம், தனக்கும் ஒரு நல்ல வழி காட்டுவார் என நம்பி ஏப்ரல்-2ஆம் தேதி 'ஓ காதல் கண்மணி' மூலம் திரைக்கு வருகிறார் துல்கர் சல்மான்.