விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மத்திய அரசு திரைப்பட கலைஞர்களுக்கு சேவை வரி விதித்துள்ளது. ஆனால் நாடக கலைஞர்கள், கிராமிய கலைஞர்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளித்தது. இதையொட்டி திரைப்பட நடிகர்களுக்கும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி நடிகர் சித்தார்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
"இயக்குனர்கள் சொல்வதை கேட்டுத்தான் நாங்கள் மேக்அப் போட்டு அவர்கள் சொல்கிறபடி நடிக்கிறோம். தொழில் முறையில் எங்களுக்கும் நாடக நடிகர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எனவே நாடக நடிகர்கள், கிராமிய கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்று எங்களுக்கும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருமாறு: யாருக்கு வரி விதிக்க வேண்டும், விதிக்க கூடாது என்று முடிவெடுப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. கிராமிய கலைஞர்கள் லாப நோக்கம் இல்லாமல் பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு அரசு விரிவிலக்கு அளித்துள்ளது. கிராமிய கலைஞர்களையும், திரைப்பட கலைஞர்களையும் ஒரே விதமாக கருத முடியாது. திரைப்படங்கள் பெரும் முதலீட்டில் தயாரிக்கப்படுகிறது. நடிகர்கள் பெரும் தொகை சம்பளமாக பெறுகிறார்கள். எனவே நடிகர்கள் வரிவிலக்கு சலுகை கேட்க முடியாது. அதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.