ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உதயநிதி, நயன்தாரா சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் 'நண்பேன்டா' படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நண்பேன்டா படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே, தான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கிவிட்டார் உதயநிதி. 'மான் கராத்தே' பட இயக்குநர் திருக்குமரனின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக, எமி ஜாக்ஸன் நடிக்கிறார். சந்தானத்துடன் உரசல் ஏற்பட்டதால் அவர் இப்படத்தில் இல்லை. காமெடியனாக கருணாகரன் நடிக்கிறார்.
உதயநிதி உடன் எமிஜாக்சன், கருணாகரன் பங்குபெற்ற இப்படத்திற்கான முதல் ஷெட்யூல் கேரளாவில் நடைபெற்றது. பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கிய இந்த முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக நடிகை எமி ஜாக்ஸன் தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார். அதோடு கேரள மலையில், செங்குத்தான இடம் ஒன்றில் ஏறும்போது நடிகை எமி ஜாக்ஸன் தடுமாறிவிழ, பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த நடிகர் கருணா அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றி இருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு கருணாவுக்கு ட்வீட் மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார் எமி. ''நேற்று எமி ஜாக்ஸனை காப்பாற்றினார் கருணா. உண்மையான ஹீரோ. 'நான் என் கடமையைத்தானே செஞ்சேன்'' என வேடிக்கையாக ட்வீட் செய்திருக்கிறார் உதயநிதி.