ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயற்கையாகவே தனது மனதிற்கு சரியென்று படும் துணிச்சலான கருத்துக்களை அவ்வப்போது சூடான ஸ்டேட்மேன்ட்டுகளாக வெளியிடுபவர்தான் மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான '22 ஃபீமேல் கோட்டயம்' படத்தில் ரீமா கல்லிங்கல் தன்னை ஏமாற்றிய காதலனுக்கு 'வித்தியாசமான' தண்டனை கொடுக்கும் துணிச்சலான வேடத்தில் நடித்தபின் அவரது பேச்சில் தன்னம்பிக்கையும் உக்கிரமும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது.
டில்லி மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முகேஷ் சிங் என்பவன் சமீபத்தில் “பலாத்காரத்துக்கு ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்பு உள்ளது. தூக்கு தண்டனை வழங்கினால், எதிர்காலத்தில் இதைவிட மோசமான பலாத்காரம் நடக்கும்" என்று பேட்டி அளித்துள்ளான். அவனின் இந்த ஆணவ பேச்சு பலரையும் போல ரீமா கல்லிங்கல்லையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இது குறித்து தனது உணர்வை வெளிப்படுத்தும் விதமாக “மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்.. பிற்பாடு அவன் இந்திய தெருக்களில் சுதந்திரமாக கூட உலாவரக்கூடும்.. பெஸ்ட் ஆப் லக் லேடீஸ்” என நமது நாட்டு சட்ட அமைப்பை பற்றி விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்..!