ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புலி படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க்கை ஏற்கனவே பக்காவாக முடித்துவிட்டார் அட்லீ. புலி படத்தை முடித்துவிட்டு விஜய் வருவதற்கு சில மாதங்களாகும். அதுவரை சும்மா இருக்க முடியாது என்பதால் தன் உதவியாளர் ஒருவருக்காக ஸ்கிரிப்ட் பண்ணிக் கொடுத்திருக்கிறார். அந்த ஸ்கிரிப்ட்டை ராஜா ராணி படத்தின் தயாரிப்பாளரும் ஆர்யாவின் ஆடிட்டருமான த நெக்ஸ்ட் பி பிலிம் சண்முகத்திடம் சொல்ல, கதையைக் கேட்ட அவர் வியந்துபோனாராம். அதுமட்டுமல்ல, அந்தக்கதையை தானே படமாக்கவும் முன் வந்திருக்கிறார்.
ஜீவாவை ஹீரோவாக வைத்து இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யாவை கமிட் பண்ணி உள்ளனர். அட்லீயின் ஸ்கிரிப்ட்டுக்கு வசனம் எழுதி இயக்குகிறார் அவரது உதவியாளர். ஜீவாவை வைத்து இந்தப் படத்தை எடுக்க இருந்தாலும், அவருக்கு மார்க்கெட் இல்லை என்பதையும், படத்தை பிசினஸ் பண்ண வாய்ப்பில்லை என்பதையும் உணர்ந்து, ஜீவா தற்போது வாங்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் மட்டுமே தருவேன் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார் ஆடிட்டர் சண்முகம். கையில் படமில்லாமல் கடந்த சில மாதங்களாக சும்மாவே வீட்டில் இருக்கும் ஜீவா எல்லா கண்டிஷன்களுக்கும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.