ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் அறிமுகமானவர் ஜெய் குஹேய்னி. சென்னையில் வசதியான குடும்பத்து பெண். ஆனாலும் சினிமா மீது அவருக்கு தீராத காதல். முறைப்படி பரதநாட்டியம் கற்றவர். வெளிநாட்டில் சினிமா தொழில்நுட்பம் கற்றவர்.
முதல் படத்தில் ஹீரோயினுக்கான முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் நடிக்க நிறைய வாய்ப்பிருந்த காரணத்தால் ஆரோகணத்தில் நடித்தார். அடுத்து சிறு பட்ஜெட்டில் தயாரான மெய்யழகி என்ற படத்தில் நடித்தார். மனவளர்ச்சி குன்றிய தம்பியை கஷ்டப்பட்டு வளர்க்கும் ஒரு அக்காவின் கேரக்டரில் நடித்தார். தன்னை விட வயதில் மூத்த ஒரு இளைஞனுக்கு கிராமத்து அக்காவாக நடித்த துணிச்சல் இந்த இளம் வயதில் வேறு எந்த நடிகைக்கும் வந்திருக்காது.
அந்தப் படத்தை மீடியாக்கள் பாராட்டினாலும் மக்களின் கவனத்துக்கு வராமலேயே போய்விட்டது. மெய்யழகி மக்களிடம் உரிய முறையில் போய் சேர்ந்திருந்தால் ஜெய் குஹேனியின் இன்றைய உயரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். தப்போது சி.எஸ்.கே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மூன்று ஹீரோக்களின் கதையை இணைக்கிற முக்கியமான கேரக்டர் அவருக்கு.
சினிமாவில் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல், சினிமாவில் நம்பர் ஒண் இடத்தை பிடித்து, கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் நல்ல படங்களை தேடித் தேடி சென்று நடிக்கிற ஜெய் குஹேய்னி சிஎஸ்கேவில் வெல்வரா என்பது படம் வெளிவரும்போது தெரியவரும்.