ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நார்வேயில் ஆண்டுதோறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் 23ந் தேதி முதல் 26ந் தேதி வரை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கிறது. இதில் திரையிடுவதற்காக சிகரம் தொடு, ஜிகிர்தண்டா, கயல், குக்கூ, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ராமானுஜன், நான்தான் பாலா, தேன்கூடு, காவியத் தலைவன், தெகிடி, காடு, குற்றம் கடிதல் ஆகிய 12 படங்கள் தேர்வு பெற்றுள்ளது.
இவைகள் தவிர சர்வதேச அளவில் 9சி ஓஸ்லோ (நார்வே), உயிர்வரை இனித்தது (டென்மார்க்), சிவசேனை (லண்டன்) ஆகிய படங்களும் தேர்வாகி உள்ளது. 15 குறும்படங்களும், 4 டாக்குமெண்டரிகளும், 5 இசை ஆல்பங்களும், 2 அனிமேஷன் படங்களும் திரையிட தேர்வாகி உள்ளது. இதனை நார்வே தமிழ் திரைப்பட விழா தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது.