ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று தொடர்ந்து வில்லன் நடிகர் ஒருவர் தொல்லை தருவதாக புதுமுக நடிகை போலீசில் புகார் செய்துள்ளார். கேரளாவை சேர்ந்த அஞ்சலி என்ற பாக்கியாஞ்சலி (21) நெல்லு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே உன்னை காதலிக்கிறேன் என்ற படத்தில் கமிட் ஆன பாக்யாஞ்சலி, அந்த படத்திலும் நடித்தார். அப்படம் ரீலிஸ் ஆகிவிட்ட நிலையில் அதில் வில்லனாக நடித்த வேலு தனக்கு கல்யாண டார்ச்சர் கொடுத்து வருவாக பாக்யாஞ்சலி போலீசில் புகார் செய்துள்ளார்.
வில்லன் நடிகர் வேலுவிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். அந்த புகாரை விசாரிக்கும்படி துணை கமிஷனர் லட்சுமிக்கு கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நடிகை பாக்யாஞ்சலி துணை கமிஷனர் லட்சுமியிடம், தனக்கு வில்லன் நடிகர் வேலு கொடுக்கும் தொல்லைகள் குறித்து தெரிவித்ததுடன், புகார் மனு ஒன்றையும் அளித்தார்.
அதில், கடந்த 2009-ம் ஆண்டு சினிமா படப்பிடிப்புக்காக சென்னைக்கு சென்னை வந்தேன். அப்போது வில்லன் நடிகர் வேலு அறிமுகமானார். அவர் என்னை காதலிப்பதாக தெரிவித்ததுடன், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். ஆனால் அதற்கு நான் சம்மதிக்கவில்லை. இனி இந்த எண்ணத்துடன் என்னிடம் பழகக் கூடாது என்றும் எச்சரித்தேன். ஆனால் வேலு அதற்கெல்லாம் பயப்படவில்லை. தொடர்ந்து தனது ஆசையை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி வந்தார். சினிமா படப்பிடிப்புக்காக சென்னைக்கு வரும்போதெல்லாம் சூட்டிங் நடக்கும் இடத்துக்கு வேலு வந்து விடுவார். மேலும் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்புவார். சமீபத்தில் வடபழனி ஸ்டூடியோ ஒன்றில் நடந்த படப்பிடிப்புக்காக வந்தபோது அங்கு வந்த வேலு, எனது கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு செல் என்று மிரட்டும் தொனியில் பேசினார். எனவே இந்த தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புகார் செய்கிறேன். வில்லன் நடிகர் வேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
பின்னர் நடிகை பாக்யாஞ்சலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நான் வேலுவிடம் நட்புடன் பழகினேன். ஆனால் அவர் தன்னுடன்தான் பேச வேண்டும், பழக வேண்டும், செல்போனில் பேச வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ரெயிலில் போனாலும் அங்கு வந்து தொந்தரவு செய்கிறார். எனது கைப் பையை பறித்துக் கொண்டு அதிலிருந்த ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டார். வேலு வீட்டில் இல்லை என்றும் எனவே அந்த பையை எடுத்துத் தருவதாகவும் அவரது வீட்டுக்கு வேலுவின் உறவுப் பெண் ஒருவர் அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு மறைந்திருந்த வேலு என்னை அடித்து அறை ஒன்றில் அடைத்து வைத்தார். மேலும், என்னிடம் பல வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். அவரை திருமணம் செய்ய வேண்டுமென்றும், படங்களில் அவருடன் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றும், ரூ.15 லட்சம் அவரிடம் நான் கடன் வாங்கியது போலவும் ஆவணங்களை தயார் செய்துள்ளார். மேலும் அவருக்கு நான் முத்தம் கொடுத்தது போன்ற வீடியோ படமும் எடுத்து வைத்துள்ளார். அதை பத்திரிகையில் கொடுத்து என்னை கேவலப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார். எனது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.