ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெள்ளையா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்றொரு கருத்தாக்கம் இருப்பதுபோலவே, வி.ஐ.பி.க்களும் பொய் சொல்ல மாட்டாங்க என்று பலரும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை புத்திசாலித்தனமாக சில வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
சமூக வலைத்தளங்களில் உள்ள தன்னுடைய பக்கத்தில் அடிக்கடி பதிவுகளைப்போட்டு ரசிகர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து வருகிறார் முருகதாஸ். குறிப்பாக 'துப்பாக்கி' படத்திற்கு தன்னுடைய ட்விட்டரை பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தினார். அதன் பிறகு, அடிக்கடி ட்விட்டர் மூலம் தனது கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்.
விஜய்யை வைத்து இயக்கிய 'கத்தி' படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு என்ற விவரத்தை முதலில் வெளியிட்டவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். அதையே பிற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. அடுத்தடுத்த நாட்களில் 'கத்தி' படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் சொன்னார் இயக்குனர் முருகதாஸ். அதை அனைவரும் நம்பினார்கள். விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகள் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்த பிறகே, முருகதாஸ் சொன்ன 100 கோடி வசூல் மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்பது தெரிய வந்தது. என்றாலும், முருகதாஸ் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்து வரும் செய்திகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது உண்மை.
இந்நிலையில், அவரது ட்விட்டர் கணக்குக்கு கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது ட்விட்டர். கடந்த சில வருடங்களாகவே ட்விட்டரில் அவர் கணக்கு வைத்திருந்தாலும், அதிகாரபூர்வ கணக்கு என ட்விட்டர் அறிவிக்காமலேயே இருந்தது. தற்போது அவரின் @ARMurugadoss என்ற ட்விட்டர் கணக்கிற்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ட்விட்டர் கணக்கை இதுவரை 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அதேபோல் அவரின் facebook.com/OfficialARMurugadoss என்ற ஃபேஸ்புக் பக்கமும் ஏற்கெனவே அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்தப் பக்கத்தை இதுவரை 2 லட்சம் பேர் 'லைக்' செய்துள்ளனர்.