ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சிம்பு கதாநாயகன் ஆனபிறகு தன்னைத்தானே இயக்கிக் கொள்ளவும் தொடங்கினார். அதோடு, மற்ற டைரக்டர்கள் சொல்லும் கதைகளிலும் தனது தலையீட்டை அதிகமாக செலுத்தினார். அதன்காரணமாகவே சிம்புவை வைத்து படம் பண்ணவே இயக்குனர்கள் அஞ்சினர்.
அதேசமயம், கோவில் படத்துக்கு அவரை புக் பண்ணிய ஹரி மட்டுமே, நான் சொல்வதுதான் கதை, நான் சொல்வதுதான் சீன் இதன்படிதான் நடிக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டு சிம்புவிடம் வேலை வாங்கினார். அதோடு சிம்புவின் வழக்கமான பாணியை மாற்றி தனது பாணியிலேயே அந்த படத்தில் நடிக்க வைத்தார்.
அதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி டைரக்டர்களின் விருப்பத்திற்கேற்ற நடிகராக மாறினார் சிம்பு. இருப்பினும், அவர் நடிக்கும் படங்கள் வெளியாகாமல் வருடக்கணக்கில் இழுத்தடிப்பதால், இது நம்ம ஆளு படத்தை அடுத்து தன்னைத்தானே இயக்கிக்கொள்ளவும் சில மெகாப்பட நிறுவனங்களை அணுகி வருகிறார் சிம்பு.
ஆனபோதும், இது நம்ம ஆளு படத்தின் ரிலீசுக்குப்பிறகு பேசுவோம் என்று சிலர் அவருக்கு நம்பிக்கை வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம். அதனால் இந்த படம் எப்படியேனும் வெற்றிபெற்ற தனது கேரியரை மாற்றியமைக்க வேண்டும் என்று மானசீக தெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கிறார் சிம்பு.