ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாடல்கள் வரிகளில் இருந்து தன்னுடைய படத்துக்கு தலைப்புகளை தேர்வு செய்து வருவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் கௌதம் மேனன். அவரது இயக்கத்தில் ஏற்கனவே வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா? நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால் ஆகிய படங்களின் தலைப்புகள் சூப்பர்ஹிட்டான பாடல்வரிகளிலிருந்து எடுத்தவைதான். இந்த வரிசையில்... அவரது லேட்டஸ்ட் படத்தின் தலைப்பும் இடம்பெற்றுவிட்டது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கௌதம் மேனனும், சிம்புவும் இணைந்துள்ள படத்திற்கு அச்சம் என்பது மடைமையடா என்று தலைப்பு வைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் இதை அறிவித்தார் கௌதம் மேனன். அச்சம் என்பது மடைமையடா எம்.ஜி.ஆர். நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல். எனவே அச்சம் என்பது மடைமையடா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதை ஆக்ஷன் படம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில்... அச்சம் என்பது மடைமையடா 100% லவ் சப்பெஜக்ட். மருந்துக்குக் கூட படத்தில் ஆக்ஷன் கிடையாது. அது மட்டுமல்ல... விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் போல் காதலியைத் தேடி சிம்பு ஊர் ஊராக அலைவதுதான் கதை. அப்புறம் என்னத்துக்கு அச்சம் என்பது மடைமையடா என்ற நரம்பைப் புடைக்க வைக்கும் தலைப்பை வைக்க வேண்டும்?