14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சத்யா 2 படத்தின் மூலம் படுதோல்வியை சந்தித்த பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா, மென்டல் படத்தின் மூலம், மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்பியுள்ளார். சத்யா கம்பெனி, சர்கார் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. இவர் இயக்கிய சத்யா படத்தின் இரண்டாம் பாகம், 2013ல் வெளிவந்தது. அந்தபடம், இதுவரை பாலிவுட் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, சில காலம் அமைதியாக இருந்த ராம்கோபால் வர்மா, மென்டல் படத்தின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வருகிறார். டிஸ்கா சோப்ரா, சச்சின் ஜோஷி முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். சைக்காலஜிக்கல் திரில்லர் படமான மென்டல் படத்தை தொடர்ந்து, ராம்கோபால் வர்மா, XXX எனும் பெயரிலான படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். பாலிவுட்டில் பரபரப்பின்றி இதுவரை ராம்கோபால் வர்மா இருந்திருந்தாலும், தென்னிந்திய திரையுலகில்ல், இவரது இயக்கத்தில் ரெளடி, ஐஸ் கிரீம் மற்றும் கொலுசு உள்ளிட்ட படங்கள் வெளியான வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கது.