ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உத்தமவில்லன் ஆடியோ விழாவில் அப்பட டைரக்டர் ரமேஷ் அரவிந்த் பேசும்போது, கமல் சார் ஒரு சூரியன் போன்றவர். அதனால் நான் அவரை இயக்கினேன் என்று சொல்வதை விட, படத்துக்கு கதை எழுதிய அவர் தன்னிடமுள்ள ஞானத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களெல்லாம் கஷ்டப்பட்டு நடித்ததை நான் மானிட்டரில் பார்த்து கருத்து சொன்னேன் அவ்வளவுதான்.
காரணம், கமல் சாருடைய கதை என்பதால் அவரே அனைவரிடத்திலும் வேலை வாங்கி விட்டார். மேலும், இந்த படத்துக்காக 2 வருடமாக உழைத்திருக்கிறோம். என்னை பார்த்தவர்களெல்லாம் படம் எப்ப ரிலீஸ்? என்று கேட்டு துளைத்துக்கொண்டேயிருந்தனர். இப்போது ஆடியோ ரிலீசுக்கு வந்து விட்டோம். அதனால் புலிமேல் அமர்ந்த ஐயப்பனை போல் ஏப்ரல் மாதம் கமல் சார் ரசிகர்கள் முன்பு காட்சி கொடுக்கப்போகிறார்.
அதோடு, இந்த படத்துக்கு புதுமையான இசையை கொடுத்துள்ளார் ஜிப்ரான். கமல் சார் அவரை எனக்கு அறிமுகம்செய்து வைத்தபோது, வாகை சூடவா படத்துக்கு அவர் இசையமைத்த சர சர சரகாத்து என்ற பாடலை கொடுத்தார். அதைக்கேட்டு அன்று இரவு முழுக்க என்னுள் அந்த இசையே ஓடிக்கொண்டிருந்தது. அதேபோல் அவர் உத்தமவில்லனுக்கும் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார் என்றார்.
கமலை ஏமாற்றிய கர்ப்பிணி ஊர்வசி : கமலுடன் மைக்கேல் மதன காமராஜன் உள்பட சில படங்களில் நடித்திருக்கும் ஊர்வசி உத்தமவில்லன் படத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க சில நடிகைகள் நான் நீயென்று போட்டி போட்டபோது, இந்த வேடத்தில் ஊர்வசியை தவிர யாராலும் நடிக்க முடியாது என்று சொல்லி அவரை நடிக்க வைத்திருக்கிறார் கமல். ஆனால், உத்தமவில்லன் படத்தில் கமிட்டானபோது கர்ப்பமாக இருந்தாராம் ஊர்வசி. அந்த விசயத்தை கமலிடம் சொன்னால் தவிர்த்து விடுவார் என்பதால், அவரிடம் சொல்லாமலேயே கமிட்டாகி விட்டாராம்.
இதுபற்றி உத்தமவில்லன் ஆடியோ விழாவில் ஊர்வசி கூறும்போது, கமல் சார் என் மீது மிகவும் அன்பு கொண்டவர். அதனால் அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து கொண்டேயிருந்தது. அதனால்தான் நான் கர்ப்பமாக இருக்கிற விசயத்தை சொன்னால் என்னை படத்தில் நடிக்க வைக்க மாட்டார் என்பதால் அதை மறைத்து விட்டேன். அதோடு, நம்மை ஒன்றும் ஹீரோயினியாக நடிக்க வைக்கப்போவதில்லை. சின்ன வேடம்தானே. எப்படியும் இரண்டொரு மாதத்தில் எடுத்து விட்டு அனுப்பி விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் படம் இழுத்து விட்டது. அதோடு, ஒருநாள் என் நடவடிக்கைகளைப் பார்த்து கமலே நான் கர்ப்பிணி என்பதை கண்டு பிடித்து விட்டார். அதையடுத்து, என் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகமாக படமாக்கி விட்டனர்.
ஆனால், பின்னர் அவர்கள் மொத்த படத்தையும் முடித்து விட்ட வரும்போது எனக்கு டெலிவரி நெருங்கி விட்டது. அப்படியும் என்னை விடவில்லை. டப்பிங் தியேட்டருக்கு கூட்டிச்சென்று டப்பிங் பேச வைத்து விட்டனர். உத்தமவில்லனுக்கு டப்பிங் பேசிவிட்டு திரும்பிய 3வது நாளில் எனக்கு டெலிவரி ஆகி விட்டது என்றார்.