சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
அருள்நிதி நடித்து வரும் புதிய படம் டிமாண்டி காலனி. இது 19ம் நூற்றாண்டில் ஆழ்வார்பேட்டையில் டிமாண்டி காலனியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் திகில் படம். இதனை ராம நாராணயனின் மகன் முரளியின் தேனாண்டாள் பிலிம்சும், அருள்நிதியின் மோகனா மூவீசும் இணைந்து தயாரிக்கிறது. ஹீரோயின் யார் என்பதை இன்னும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். அதற்குள் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.
பிரபல கிதார் இசை கலைஞர் கேபாஜெரோமியா இசை அமைக்கிறார். இவரது இசையில் இசை அமைப்பாளர்கள், இமான், அனிருத், ஆண்ட்ரியா பாடல்கள் பாடி உள்ளனர். படத்திற்காக 19ம் நூற்றாண்டின் லஸ் கார்னர், பட்டினபாக்கம், ஆழ்வார் பேட்டை பகுதிகளை அச்சு அசலாக செட் போட்டு படமாக்கினர். படத்தை இயக்கி இருப்பது ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் ஆர்.அஜய்ஞானமுத்து. தற்போது அருள் நிதி நடிப்பில் தயாராக இருக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் வெளியான பிறகு இந்தப் படம் ரிலீசாகிறது.