ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரும்ப, திரும்ப ஒரே மாதிரியாக இசையமைத்து போரடித்து விட்டது. இதனால் தான், திரைக்கதை, தயாரிப்பு போன்ற புதிய துறைகளில் கால் பதித்துள்ளேன், என, பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேட்டி அளித்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில், 100க்கும் ஏராளமான படங்களில் இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவர் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகியுள்ள, ஜெய் ஹோ என்ற ஆவணப் படம், சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது.
இதற்காக, நியூயார்க் நகருக்கு வந்திருந்த ரகுமான், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இப்போது, திரைக்கதை, திரைப்பட தயாரிப்பு போன்ற துறைகளில் தீவிரமாக செயல்படத் துவங்கியுள்ளேன். ஒரு திரைப்படத்தில் நடிக்கிறேன். அனைத்து திரைப்படங்களுக்குமே, ஐந்து மெலோடி பாடல்கள், ஒரு குத்துப் பாட்டு என்று தான் இசையமைக்க வேண்டியுள்ளது. ஒரே மாதிரியாக, திரும்ப, திரும்ப இசையமைப்பது போரடித்து விட்டது. இதை தாண்டி, புதிதாகவும், சவாலாகவும் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே தான், திரைக்கதை எழுதுவது, படங்கள் தயாரிப்பது போன்ற துறை களில் கால் பதித்துள்ளேன்.
பாம்பே ட்ரீம்ஸ் என்ற இசை ஆல்பத்துக்கான பணியில் ஈடுபட்டிருந்த போது, பிரிட்டனைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாய்ட் வெப்பேர், உங்களுக்கு கதை, திரைக்கதை குறித்து ஆர்வம் உள்ளதா என, கேட்டார். ஒரு நாள், நம்மால் ஏன் முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான தேடல் தான், தற்போது என்னை திரைக்கதை எழுத வைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். அதனால், ரகுமான் இனி, இசையமைப்பதை கைவிட்டு, திரைக்கதை எழுதுவதிலும், படங்கள் தயாரிப்பதிலும் பிசியாகி விடுவார் என நம்பப்படுகிறது.