பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நான்கு வாரங்களுக்கு முன் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ என்பவர் கொகெய்ன் என்கிற போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் ஒரு உதவி இயக்குனர் மற்றும் மூன்று மாடல் அழகிகளும் சேர்ந்து கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்களிடம் போதைப்பொருள் நெட்வொர்க் குறித்த தீவிர விசாரணை நடத்திய போலீஸார், அப்படியே சினிமா துறையினரின் பக்கம் தங்களது விசாரணையை திருப்பி விட்டனர்.
குறிப்பாக டாம் சாக்கோ நடித்த 'இதிகாசா' படக்குழுவினர் அனைவரும் போலீசாரின் கெடுபிடிகளுக்கு ஆளாகி அவதியுற்றனர். இன்னொருபக்கம் கைது செய்யப்பட்டவர்களின் ரத்தத்தை சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக காக்கநாடு கெமிக்கல் லேப்புக்கு போலீஸார் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் இப்போது ரிசல்ட் நெகட்டிவாக வந்திருக்கிறது. அதாவது போலீஸுக்கு நெகட்டிவாக.. ஆம்.. அந்த ஐந்து பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என ரிப்போர்ட் வந்துள்ளதால் இது என்ன புது திருப்பம் என போலீஸார் குழம்பிப்போயுள்ளர்களாம்.