14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கார்த்தி, லட்சுமிமேனன் நடித்துள்ள படம் கொம்பன். முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் படத்துக்கு தடைவிதியுங்கள் என்று மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாண் உறவின்முறை சங்க தலைவர் கே.சி.செல்வகுமார் தணிக்கை குழுவிடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் "ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியில் எங்கள் சமூகத்திற்கும் இன்னொரு சமூகத்திற்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. இந்த நிலையில் கொம்பன் என்ற பெயரில் ஒரு படம் வருவதை தொலைக்காட்சி மூலம் அறிந்தோம். முதுகுளத்தூர் பகுதியை கதைகளமாக கொண்டும், கொம்பன் என்ற கேரக்டர் ஆதிக்கவாசியின் கேரக்டராக சித்தரிப்பதாகவும் அறிகிறோம். எனவே கொம்பன் என்ற தலைப்பிற்கு தடைவிதிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தால் படத்திற்கும் தடைவிதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. படம் தணிக்கைக்கு வரும்போது இந்த மனு கவனத்தில் கொள்ளப்படும் என்ற தணிக்கை குழு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.