ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
நயன்தாரா தெலுங்கில் பிஸியாக இருந்த காலத்தில் ஐதராபாத்தில் இரண்டு வீடுகளை வாங்கிப்போட்டிருந்தார்.. தெலுங்கில் இப்போது படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒய்வு நாட்களில் அவர் தங்குவது அங்கேதான். தவிர இன்னும் சில பண்டிகை, குடும்ப விஷேசங்களில் கலந்துகொள்வதற்காக அவ்வப்போது தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று தனது குடும்பத்தினருடன் தங்குகிறார். அவரது பெற்றோர்களும் சொந்த ஊரில் உள்ள பணிகள் காரணமாக கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டனர். தமிழில் தற்போது இடைவிடாமல் பல படங்களில் நடித்துவருகிறார் நயன்தாரா. ஆனாலும் சென்னையை பொறுத்தவரை நயன்தாராவுக்கு சொந்தமாக வீடு வாங்கும் எண்ணம் துளியும் இல்லையாம்.
ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்காக சென்னை வரும்போது ஹோட்டலிலேயே தங்கிக்கொள்கிறார்.. அவர் வந்துசெல்லும் வரை உள்ள வசதிகளை தயாரிப்பு நிறுவனமே செய்துவிடுவதால் அவருக்கு ஹோட்டலில் தங்குவதே சௌகர்யமாக இருக்கிறதாம். ஷூட்டிங் முடிந்ததும் ஹைதராபத்துக்கோ அல்லது கேரளாவுக்கோ ப்ளைட் ஏறிவிடுகிறார். அவரது நெருங்கிய நண்பர்களோ இதுதான் நயன்தாராவின் லைப்ஸ்டைல் என்கிறார்களாம்.