ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீதானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, யான் என ஜீவா நடிப்பில் கடந்த வருடங்களில் வெளியான படங்கள் எதுவுமே ஓடவில்லை. குறிப்பாக, அவரது மார்க்கெட் வேல்யூவுக்கு அதிகமான செலவில் எடுக்கப்பட்ட யான் படத்தின் தோல்வி அப்படத்தின் தயாரிப்பாளரை தலையில் துண்டைப்போட வைத்துவிட்டது. தொடர்தோல்வி காரணமாக ஜீவாவை வைத்து படம் எடுக்க யாருமே முன்வரவில்லை. எனவே சூப்பர்குட் பிலிம்ஸில் மானேஜராக வேலைபார்க்கும் செந்தில் என்பவரது பெயரில் தானே படத்தைத் தயாரித்து நடிக்கிறார் ஜீவா.
இந்தப் படத்தை ராம்நாத் என்பவர் இயக்குகிறார். இவர் கருணாஸை வைத்து அம்பாசமுத்திரம் அம்பானி என்ற காமெடி படத்தை இயக்கியவர். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியிருக்கிறார்கள்! மார்க்கெட் இல்லாத ஜீவா உடன் நடித்தால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம் நயன்தாரா. ஏற்கனவே ஈ படத்தில் சேர்ந்து நடித்த பழக்கத்தில் ஜீவாவே நேரடியாக நயன்தாராவுக்கு போன் போட்டு பேசினாராம். இப்போது நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறேன். எனவே கால்ஷீட் இல்லை என்று நாசூக்காக மறுத்துவிட்டாராம் நயன்தாரா!
அவர் நடிக்க மறுத்ததால் இப்போது ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவை கமிட் பண்ணி இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் 15-ஆம் தேதி துவங்குகிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படம் சிட்டி, வில்லேஜ் பின்னணியில் உருவாகிறது!