ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முந்தானை முடிச்சி ஊர்வசிக்கு கதாநாயகி வாய்ப்புகள் குறைந்த பிறகு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக ரூட்டை மாற்றினார். ஆனால், அந்த சமயத்தில் முதல் கணவரான மனோஜ் கே. ஜெயனை விவாகாரத்து செய்தது, 2013ல் சிவபிரசாத் என்பவரை மறுமணம் செய்து கொண்டது போன்ற குடும்ப பிரச்னைகளால் அவர் அதிகமான படங்களில் ஒப்பந்தமாகவில்லை. ஆனால், தற்போது முழுவீச்சில் களத்தில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுலின் அம்மாவாக நடித்திருந்த ஊர்வசி, அடுத்து மாப்பிள்ளை விநாயகர், சவாலே சமாளி, உத்தமவில்லன் என சில படங்களில் நடித்துள்ளார்.
இதில் கமலின் உத்தமவில்லன் படத்தில் ஊர்வசிக்கு வித்தியாசமான வேடமாம். அந்த வேடத்தில் அவர் மட்டுமே நடிக்க முடியும் என்று அவரையே நடிக்க வைத்திருக்கிறார் கமல். அதோடு அவர் நடித்த ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து டோட்டல் யூனிட்டே கைதட்டி ரசித்திருக்கிறது. அதனால் மீண்டும் கோடம்பாக்கத்தில் ஊர்வசியைப்பற்றி பரவலாக பேசத் தொடங்கி விட்டனர். செண்டிமென்ட் மட்டுமின்றி காமெடியும் கலந்து நடிக்கக்கூடிய அம்மா நடிகை கிடைத்து விட்டதால், ஊர்வசி பக்கம் புதிய படங்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டன. விளைவு, மார்க்கெட்டில் இருக்கும் சரண்யா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட சில அம்மாக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.