14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இளையராஜா இசையில் இதுவரை எண்ணற்ற கவிஞர்களும், பாடலாசிரியர்களும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா.காமராசன், மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன் உள்ளிட்ட பலர் அவருடைய இசையில் பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், தேசிய விருது பெற்ற பாடலாசிரியரான பா.விஜய் இதுவரை இளையராஜா இசையில் ஒரு பாடலைக் கூட எழுதியதில்லை.
பாக்யராஜால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்ட பா.விஜய், பல ஹிட்டான பாடல்களை எழுதியிருக்கிறார். 2005ம் ஆண்டு வெளிவந்த 'ஆட்டோகிராப்' படத்திற்காக எழுதிய 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார். ஏ.ஆர்.ரகுமான், யுவன்ஷங்கர் ராஜா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியிருந்தாலும் இளையராஜா இசையில் இதுவரை ஒரு படத்தில் கூட அவர் பாடலை எழுதவில்லை.