சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மஜ்னு, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்தவேளை, உற்சாகம் படங்களை இயக்கிய ரவிச்சந்திரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் ''நட்பதிகாரம் 79''. இதில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த ராஜ்பரத், வல்லினம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த அம்ஜத்கான் ஆகியோர் ஹீரோக்களாக பதவி உயர்வு பெற்று நடிக்கிறார்கள். ஹீரோயின்களாக ரேஷ்மி மேனன், தேஜஸ்வி நடிக்கிறார்கள். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார், தீபக் நிலம்பூர் இசை அமைக்கிறார்.
"எனது முந்தைய படங்களில் சென்ட்டிமெண்டான காதல் பற்றி நிறைய பேசி இருக்கிறேன். இதில் நட்பை பற்றி பேசுகிறேன். இன்றைய இளைஞர்களிடம் நட்பின் வீச்சு அதிகமாக இருக்கிறது. உறவினர்களை விட நண்பர்களை அதிகமாக நேசிக்கிறார்கள், நம்புகிறார்கள். அவர்களின் நட்புக்கு இருக்கும் ஒரே சவால் பெண்கள் மற்றும் காதல். இந்த சிக்கல் எப்படி உருவாகிறது. அதை எப்படி தவிர்ப்பது என்பதுதான் படத்தின் கதை. திருக்குறளில் நட்பாதிகாரம் என்பது 79வது அதிகாரத்தில் வருகிறது. அதனால்தான் படத்திற்கும் நட்பதிகாரம் 79 என்று தலைப்பு வைத்திருக்கிறேன்.
கதைக்கு தேவை என்பதால் இரண்டு ஹீரோக்கள், ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். எனது படத்தில் பாடல்கள் ஸ்பெஷலாக இருக்கும். ஹாரிஸ் ஜெயராஜை நான்தான் அறிமுகப்படுத்தினேன். இந்தப் படத்தில் தீபக் நிலம்பூரை அறிமுகப்படுத்துகிறேன். இவரும் ஹாரிஸ் மாதிரி பெரிய இடத்துக்கு வருவார்" என்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்.