ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன், விஷால் இணையும் புதிய படம் கடந்த மாதக் கடைசியில் ஆரம்பமாகியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்தப் படம் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 'ஆம்பள' படத்தின் கதை விவகாரத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் விஷால், சுசீந்திரனிடம் முழுக் கதையையும் மொத்தமாகக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
'பாண்டிய நாடு' படத்தின் ஹிட் மூலம்தான் விஷாலுக்கும் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஒரு ஹிட் படத்தையே கொடுத்த தன்னை விஷால் நம்பாமல் இருப்பது சுசீந்திரனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாம். சுசீந்திரன் இயக்கிய 'ஜீவா' படத்தைக் கூட வாங்கி வெளியிட்ட விஷால், சுசீந்திரன் இடையே லேசான மனக் கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கைந்து படங்களாகவே படம் ஆரம்பிக்கும் போதே, அதன் வெளியீட்டுத் தேதியையும் சரியாகச் சொல்லி, அதன்படி படத்த வெளியிடும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர் விஷால்.
தற்போது சொந்தத் தயாரிப்பில் இறங்கியிருப்பதால் தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். 'பாண்டிய நாடு' படத்திற்குப் பின் அவர் நடித்து வெளிவந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறாமல் போனதையும் கவனித்து வைத்துள்ளாராம். அதனால்தான் அடுத்து ஆரம்பிக்கப் போகும் படத்தில் புதிய கெடுபிடியைக் கடைபிடிக்கிறார் என்கிறார்கள்.