ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை நோக்கி மளமளவென முன்னேறி வந்தார் அஞ்சலி. யார் கண் பட்டதோ... அவருக்கும் அவரது சித்திக்கும் ஏற்பட்ட தகராறில் வீட்டைவிட்டே வெளியேறினார். சித்தியின் ஆதரவாளரான டைரக்டர் களஞ்சியம் என்பவர், அஞ்சலியை மிரட்டியதாக சொல்லப்பட்டது. எனவே ஆந்திராவுக்கு தப்பியோடிய அஞ்சலி அங்கே பிரபல தயாரிப்பாளர் ஒருவரது பாதுகாப்பில் தஞ்சமடைந்தார். ஆனாலும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.எனவே படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இதற்கிடையில் வேலை இல்லாமல் சும்மா இருந்ததால், உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டார். சாப்பாடு தூக்கம் என்று பொழுதுபோக்கியதால் அஞ்சலியின் உடம்பு அநியாயத்துக்கு குண்டாகிவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அஞ்சலி. அவருடன் நடிக்கும் ஹீரோக்கள், இயக்குநர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அஞ்சலி. விரைவில் பழைய அஞ்சலியாக மாறிக்காட்டுகிறேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.