ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயனையும், தனுஷையும் கூடப் பிரித்து விடுவார்களோ, என்னமோ தெரியாது, ஆனால் தனுஷையும், அனிருத்தையும் பிரிக்கவே முடியாது போலத் தோன்றுகிறது. ஒரு வகையில் தனுஷும், அனிருத்தும் உறவினர்களாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். சிவகார்த்திகேயனாவது தனுஷுக்குப் போட்டியாக வளர்ந்துவிடுவார் என்று நினைக்கலாம். ஆனால், அனிருத்துக்கோ தனுஷோ, அல்லது தனுஷிற்கு அனிருத்தோ போட்டியாக உருவாக மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். '3' படத்தில் ஆரம்பமான அவர்களது திரையுலக நெருக்கம் படத்திற்குப் படம் அதிகமாகி வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷிடம் யாருக்காவது சவால் விட வேண்டும் என்றால் நீங்கள் யாருக்கு சவால் விடுவீர்கள் என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, தனுஷ் அனிருத்துக்கு சவால் விடுவேன் என்றார். “ஒரு முறை கூட அனிருத் போன் அடித்தால் உடனே எடுத்துப் பேச மாட்டார். அதே போல், குறிப்பிட்ட நேரத்திற்கு வரச் சொன்னால், கண்டிப்பாக வர மாட்டார். எப்போதுமே தாமதமாக வருவார். அதனால், ஒரு முறை போன் அடிக்கும் போது அவர் முதல் ரிங்-கிலேயே அந்த போனை எடுக்க வேண்டும், சொன்ன நேரத்திற்கு 'பன்க்சுவல்' ஆக வரவேண்டும் என்று சவால் விடுவேன்,” என்று பதிலளித்தார்.
தனுஷின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன் என அனிருத் அறிவிப்பாரா....?