விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
'வேலையில்லா பட்டதாரி' படத்தைத் தொடர்ந்து தனுஷ், இயக்குனர் வேல்ராஜ் மீண்டும் இணையும் புதிய படத்தின் பாடல் பதிவு ஆரம்பமாகிவிட்டது. தனுஷின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.
'வேலையில்லா பட்டதாரி' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வெளிவந்த 'அனேகன்' படமும் வெற்றி பெற்றுள்ளது. தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். ஹிந்திப் படங்களில் நடித்தாலும் தமிழ்ப் பட உலகில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டுமென்பதுதான் தனது லட்சியம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனுஷ் தெரிவித்திருந்தார்.
முன்பெல்லாம் யுவன்ஷங்கர் ராஜாவின் இனிமையான பாடல்கள் மூலம், பட்டி தொட்டியெங்கும் சென்று சேர்ந்த தனுஷ், தற்போது அனிருத்துடன் மட்டுமே இணைந்து பணிபுரிகிறார். அவர் நடிக்கும் படங்களுக்குக் கூட அனிருத்தையே சிபாரிசு செய்து வருகிறார் என்றும் ஒரு பேச்சு உள்ளது. அவர் தற்போது நடித்து வரும் 'மாரி' படத்திற்கும் கூட அனிருத்தான் இசையமைக்கிறார். தன்னை இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்ளும் தனுஷ், யுவன்ஷங்கர் ராஜாவை தன்னுடைய படங்களில் மீண்டும் இசையமைக்க வைக்காமலிருப்பது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.