ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், அம்மா அன்னம் அளிக்கும் திட்ட துவக்க விழா நடந்தது. இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு, இத்திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில் இளையராஜா பேசியதாவது, தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடியுள்ளார்கள். உணவு கிடைக்காவிட்டால் எதற்காக உலகத்தை அழிக்க வேண்டும், சாப்பாடு அல்லவா போட வேண்டும் என்று நான் சிந்தித்தது உண்டு. இப்படியொரு பசி போக்கும் உணவு திட்டத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் கொண்டு வந்தது வரவேற்கதக்கது. எனக்கு கலை பசி இருந்தது. என்னுடன் இருந்த பழைய ஆட்கள் எல்லாம் இறந்துவிட்டனர். பணம், பேர், புகழ் எல்லாம் அப்படி மாற்றிவிட்டது.
தயாரிப்பாளர்கள் சாதரணமானவர்கள் அல்ல. அவர்கள் ஒரு நல்ல நடிகர்களை உருவாக்குகிறார்கள், நல்ல இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களை உருவாக்குகிறார்கள், அவ்வளவு பலம் வாய்ந்தவர்கள் தயாரிப்பாளர்கள். சிலகாலம் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒற்றுமையின்றி இருந்தது. ஆனால் இப்போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இப்படி ஒரு அருமையான திட்டத்தை உருவாக்கி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது.
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே... என்ற பாட்டை நான் பாடியதாக சொல்கிறார்கள். அம்மான்னா சும்மா இல்லடா... என்ற பாட்டையும் நான் பாடியிருக்கிறேன். இந்த திட்டத்தை துவக்கி வைக்க என்னை அழைத்ததற்கு நன்றி. பசி இல்லாத உலகத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், பெப்சி சிவா, விக்ரமன், இப்ராஹிம் ராவுத்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.