ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் அற்புத நடிப்பாற்றலுடன் உருவாக்கப்படும் அழகான ஹீரோயின்களை எல்லாம் நல்ல சம்பளம் கொடுத்து இங்கே தமிழில் இழுத்துப்பிடித்து வைத்துக்கொள்கிறோம்.. பாவம் அவர்கள் என்ன பண்ணுவார்கள்..? எந்நேரமும் கதாநாயகிகளை உருவாக்கி கொண்டே இருக்கமுடியுமா? அவசரத்துக்கு நாம் அவர்களிடம் கடன் வாங்குவதுபோல, அவர்களும் கன்னடம், தெலுங்கிலிருந்து கதாநாயகிகளை கடன் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படித்தான் மோகன்லாலுக்கு ஜோடியாக 'பெருச்சாளி' படம் மூலமாக மலையாளத்திற்குள் நுழைந்தார் ராகினி நந்த்வினி.. 'தலைவா'வில் விஜய்யை ஒருதலையாய் காதலிக்கும் மும்பை பெண்ணாக நடித்தாரே அவர் தான்.
தற்போது இவர், 'அப்பாவும் வீஞ்சும்' என்கிற படத்தில் சன்னி வெய்னுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் திடீரென அவருக்கு ஏற்பட்ட உடல்நலகுறைவால் அந்தப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக 'ஈ ரோஜாலு' படம் மூலம் தெலுங்கில் பாப்புலர் நடிகையான ரேஷ்மா ரத்தோர் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ராகினியின் முகநூல் பக்கத்தில் அவர் தொடர்ந்து நடிப்பது போன்றே ஸ்டேட்டஸ்கள் போடப்பட்டு வருகின்றன. மியூசிக் திரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.