ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவான பிறகு காமெடி வேடங்களை தவிர்த்து விட்டு முழுநேர ஹீரோவாகி விட வேண்டும் என்பதுதான் சந்தானத்தின் எண்ணமாக இருந்தது. ஆனால், ஹீரோவாக நடித்த முதல் படமே அவரை சறுக்கி விட்டதால், வேறு வழியில்லாமல் செலக்டிவாக சில படங்களில் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதோடு, அவர் முக்கிய காமெடியான நடித்த நம்பியார், வாலிபராஜா ஆகிய படங்கள் இன்னும் திரைக்கு வரமுடியாமல் கிடக்கிறது. அதேசமயம், ரஜினியுடன் நடித்த லிங்கா, ஷங்கரின் ஐ, விஷாலின் ஆம்பள ஆகிய படங்களில் வெளிவந்து சந்தானத்தின் மார்க்கெட் தக்க வைத்தன.
இந்தநிலையில், தற்போது ஒரு படத்தை தானே தயாரித்து ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம், அந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்காததோடு, அதுபற்றிய செய்திகளையும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்.
அதேசமயம் பிரபல ஹீரோக்களுடன் காமெடியனாக நடிப்பதை தொடரும் சந்தானம், வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்ததை அடுத்து இப்போது அதே சிவாவின் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திலும் முக்கிய காமெடியனாக நடிக்கிறார். மேலும், முந்தைய படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு பெரிதாக வேலை இல்லாதபோதும், இந்த படத்தில் அவருக்கு அதிகப்படியான காமெடி காட்சிகளை கொடுக்கிறாராம் சிவா.