ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் கைபேசி காதல். கிரண், அர்பிதா, தர்ஷன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராகேஷ் பி.திலக் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் கிருஷ்ணா இசை அமைக்கிறார். திம்மபள்ளி சந்த்ரா இயக்குகிறார்.
"அன்று தூரத்தில் உள்ள மனிதர்களை இணைக்க டெலிபோன் பயன்பட்டது. இன்று பக்கத்தில் உள்ள மனிதர்களை பிரிக்க செல்போன் பயன்படுகிறது. செல்போனின் வருகையால் சந்தித்து, முகம் பார்த்து பேசும் பழக்கம் போய்விட்டது. எல்லாவற்றையும் செல்போனிலேயே முடித்து விடுகிறார்கள். செல்போன் மனிதனின் இன்னொரு புதிய உறுப்பாகவே மாறிவிட்டது-.
அருகில் காதலி இருந்தும், செல்போனை காதலிக்கும் ஒருவனின் கதைதான் படம். செல்போனால் அவன் பெற்றது என்ன, இழந்தது என்ன... என்பதை சொல்கிறோம். வெளிநாட்டிலும் செல்போன் இருக்கிறது. அவர்கள் அதனை ஒரு கருவியாக பார்க்கிறார்கள். நாம் அதனை ஒரு அங்கமாக பார்க்கிறோம். அதனால் வரும் துன்பத்தை சொல்லும் படம்" என்கிறார் இயக்குனர் சந்த்ரா.