விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பழம்பெரும் தயாரிப்பாளர் டி.ராமநாயுடு நேற்று (பிப்., 18ம் தேதி) காலமானார். அவருக்கு புகழாஞ்சலி செலுத்தும் விதமாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாயுடு அவர்களை தமிழ் தயாரிப்பாளர், தெலுங்கு தயாரிப்பாளர் என்று பிரித்து ஒரு கட்டத்திற்குள் அடைத்து விட முடியாது. அவர் ஒரு இந்திய தயாரிப்பாளர். வட இந்தியாவில் சாந்தாராம், ராஜ்கபூர், ஆசிப் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் இருந்தபோதும் இந்திய படங்களை உருவாக்கியது சென்னை. அதற்கு பாடுபட்டவர்கள் ராமநாயுடு, ஏவிஎம் போன்றவர்கள். அவர் தமிழில் படம் எடுத்தாலும் அவரை தெலுங்கு தயாரிப்பாளராக தெலுங்கில் பார்ப்பார்கள். தெலுங்கில் படம் எடுத்தாலும் தமிழ் தயாரிப்பாளராக இங்கு பார்ப்பார்கள்.
பணத்தை போட்டு திருப்பி எடுக்கிற வியாபாரியாக அவர் இருக்கவில்லை. கணக்கு பார்க்கும் தயாரிப்பாளருக்கும், வட்டிக்கு விடுபவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கலை உணர்வும், கலை மனதும் உள்ள தயாரிப்பாளராக இருந்தார்.
ஒரு படத்தின் வசனம், காட்சி எல்லாவற்றையும் கவனிப்பார். அந்த வசனத்தை ஏன் சேர்க்கவில்லை. இந்த காட்சியை ஏன் எடுக்கவில்லை என்று கேட்பார். காட்சி சரியில்லை என்றால் மீண்டும் எடுக்கச் சொல்வார். கேமரா ஸ்டாண்டின் நடுவில் உட்கார்ந்து கொண்டு காட்சிகளை கவனிப்பார். நாம் ஒரு படத்தை ரசித்தால்தான் மக்களும் ரசிப்பார்கள் என்பதை உணர்ந்திருந்தார்.
அவர் இப்போது நம்மிடம் இல்லை என்று கவலைப்படத் தேவையில்லை மகன், பேரன் என கலைவாரிசுகளை விட்டுச் சென்றிருக்கிறார். நல்ல ஸ்டூடியோக்களை தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவரை வழியனுப்பி வைப்பதில் சந்தோஷம் இல்லை என்றாலும இயற்கை நிகழ்வை மாற்ற முடியாது. நல்லதை மட்டுமே செய்துவிட்டுச் சென்றிருக்கிற நல்ல மனிதர் அவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் கூறியுள்ளார்.