ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சீயான் விக்ரம் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே, டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்துள்ளார். அதோடு, சினிமா மற்றும் டிவி சீரியல்களில் சிறிய வேடங்களிலும் நடித்து வந்தவர், அந்த காலட்டத்தில் மேடை நாடகங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.
அப்போது ஒருமுறை நாடகத்திற்காக வெளியூர் சென்றபோது, ஒரு விபத்து ஏற்பட்டு, சென்னையிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்களாம். அப்போது, விக்ரமுக்கு சிகிச்சை கொடுத்த டாக்டர்கள், ஒரு காலை எடுத்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார்களாம்.
இதனால் பலத்த அதிர்ச்சியடைந்த விக்ரமின் அம்மா மகன் உயிர் பிழைத்தாலே போதும் என்று அதற்கு சம்மதம் சொல்லி விட்டாராம். ஆனால் அவரது தந்தையோ, உடனடியாக அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து விக்ரமின் காலை எடுக்காமலேயே அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.
அதன்காரணமாக, 3 வருடங்கள் நடக்காமல் பெட்டில் இருந்த விக்ரம், பின்னர் படிப்படியாக நடக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு நீச்சல், கராத்தே, உடற்பயிற்சி செய்து தன்னை தயார்படுத்தியிருக்கிறார் விக்ரம். ஆனால் அதன்பிறகு அவரது காலில் எந்த பிரச்னையும் இல்லை என்றபோதும், ஐ படத்துக்காக ரயில் சண்டை காட்சியில் நடித்தபோது தனது காலில் மீண்டும் வலியை உணர்ந்தாராம் விக்ரம். அதனால் இனிமேல் நடிப்புக்காக உடலை அதிகமாக வருத்துவதில்லை என்றும் அவர் முடிவு செய்திருக்கிறாராம்.