அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் |
அஜீத் நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் ஜனவரி கடைசியில் வெளியாக இருந்தது. பின்னர் தியேட்டர் பிரச்சினை காரணமாக பிப்ரவரிக்கு மாற்றினர். அதனால் அந்த நேரத்தில் வெளியாக இருந்த சில படங்கள் ரிலீஸ் தேதிகளை மாற்றிக்கொண்டு பின்வாங்கின.
ஆனால், அஜீத் படம் ரிலீசான அடுத்த வாரத்திலேயே தனுஷின் அனேகன் களமிறங்கியது. அஜீத் படம் வெளியாகி ஒரு வாரமாகி விட்டதால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றுதான் அவர்கள் நினைத்தனர். ஆனால், என்னை அறிந்தால் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதால், அந்த படத்தை திரையிட்டிருக்கும் எந்த தியேட்டரையும் அனேகனுக்கு கொடுக்க தியேட்டர்காரர்கள் தயாராக இல்லையாம்.
அதனால், தங்கள் படம் வெளியானதும் என்னை அறிந்தால் திரையிட்டிருக்கும் நிறைய தியேட்டர்கள் காலியாகி நம் பக்கம் திரும்பி விடும் என்று எதிர்பார்த்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் கணக்கு தவறாகி விட்டதாம். இப்போது வெறும் 207 தியேட்டர்களில் மட்டுமே(தமிழகத்தில்) அனேகனை திரையிட்டிருக்கும் அவர்கள் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த வசூல்கூட இன்னும் கைசேரவில்லையாம். இதற்கிடையே, வருகிற வெள்ளிக்கிழமை அன்று மேலும் சில படங்களும் வெளியாக இருப்பதால், அனேகன் வட்டாரம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.