அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி | டாம் குரூசுக்கு சிறப்பு ஆஸ்கர் விருது அறிவிப்பு | பிளாஷ்பேக்: டி.ராஜேந்தர் 2 வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: புராண படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலசுப்பிரமணியம் | கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? |
அஜீத் நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் ஜனவரி கடைசியில் வெளியாக இருந்தது. பின்னர் தியேட்டர் பிரச்சினை காரணமாக பிப்ரவரிக்கு மாற்றினர். அதனால் அந்த நேரத்தில் வெளியாக இருந்த சில படங்கள் ரிலீஸ் தேதிகளை மாற்றிக்கொண்டு பின்வாங்கின.
ஆனால், அஜீத் படம் ரிலீசான அடுத்த வாரத்திலேயே தனுஷின் அனேகன் களமிறங்கியது. அஜீத் படம் வெளியாகி ஒரு வாரமாகி விட்டதால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றுதான் அவர்கள் நினைத்தனர். ஆனால், என்னை அறிந்தால் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதால், அந்த படத்தை திரையிட்டிருக்கும் எந்த தியேட்டரையும் அனேகனுக்கு கொடுக்க தியேட்டர்காரர்கள் தயாராக இல்லையாம்.
அதனால், தங்கள் படம் வெளியானதும் என்னை அறிந்தால் திரையிட்டிருக்கும் நிறைய தியேட்டர்கள் காலியாகி நம் பக்கம் திரும்பி விடும் என்று எதிர்பார்த்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் கணக்கு தவறாகி விட்டதாம். இப்போது வெறும் 207 தியேட்டர்களில் மட்டுமே(தமிழகத்தில்) அனேகனை திரையிட்டிருக்கும் அவர்கள் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த வசூல்கூட இன்னும் கைசேரவில்லையாம். இதற்கிடையே, வருகிற வெள்ளிக்கிழமை அன்று மேலும் சில படங்களும் வெளியாக இருப்பதால், அனேகன் வட்டாரம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.