ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வெளிப்புற விளம்பரங்களில் முதன்மை நிலையில் இருந்து வரும் நிறுவனம் எஸ்.எஸ்.இண்டர்நேஷனல். 2014ல் கல்கியின் பொன்னியின் செல்வனை மிக பிரமாண்டமாக 18 முறை மேடையேற்றிய நிறுவனம் இது.
இந்த நிறுவனம் பிப்ரவரி 28ஆம் தேதி சென்னையிலுள்ள மியூசிக் அகாடமியில் மாலை 7 மணிக்கு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறது. அந்த நிகழ்ச்சியில் நாட்டின் மிக உயரிய இசைக்கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக, அன்றைய தினம் நடிகர் கமல்ஹாசனும், இளையராஜாவும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்கள். அப்போது, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒளி-ஒலி குறுந்தகடை கமல்ஹாசன் வெளியிடுகிறார்.
அவர்களுடன், உஸ்தாத் ஜாகிர்உசேன், விக்கு விநாயகராம், அருணாசாய்ராம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், சிவமணி, குனால் கன்ஜவாலா, மாண்டலின் ராஜேஷ், ரஞ்சித் பரோட், அனில்ஸ்ரீனிவாசன், செல்வகணேஷ், தேவிஸ்ரீ பிரசாத், ஸ்டீபன் தேவசி, உமா சங்கர், ஹர்மீத் உள்பட பல இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் கலந்து கொள்ளவும் இலவச அனுமதி கொடுக்கப்படுகிறது.