ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
லிங்கா படத்தை வாங்கி வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லி சில விநியோகஸ்தர்கள் போராட்டம் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். அடுத்ததாக, பிச்சை எடுக்கும்போராட்டம் நடத்தி, 'ரஜினி படத்தை வாங்கினால் பிச்சைதான் எடுக்க வேண்டும்' என்பதை விளக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
பிச்சை எடுக்கும் போராட்டத்தை ரஜினி வீட்டிலிருந்தே துவங்க இருப்பதாகவும், அதை அரசியல்கட்சித்தலைவர் ஒருவர் தொடங்கி வைக்கப்போவதாகவும் கூறி வருகின்றனர்.
அந்த அரசியல் தலைவர் யார்? என்று விசாரித்தபோது, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்தான் பிச்சை எடுக்கும்போராட்டத்தை துவக்கி வைக்கப்போகிறார் என்று படத்துறையில் பேச்சு அடிபடுகிறது. காரணம்.. இந்தப் பிரச்சனையில் ஈடுபட்டுள்ள திருச்சி ஏரியாவின் விநியோகஸ்தரானசிங்காரவேலன் என்பவர், சில வருடங்களுக்கு முன் திருமாவளவன் கதாநாயகனாக நடித்த அன்புத்தோழி என்ற படத்தை தயாரித்தவர். அந்த அடிப்படையில்தான் தற்போது திருமாவளவனை அணுகி இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முக்கியப்பிரமுகர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஊடகத்தொடர்பாளருமான வன்னி அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“ஒரு தொழிலில் இலாபம்-நட்டம் வருவது சகஜம்தான். சினிமா என்பது இப்போது தொழிலாக இல்லாமல் சூதாட்டமாக மாறிவிட்டது. இந்தச் சூதாட்டத்தில் அரசியல்வாதிகளை இழுப்பது அநாகரிகம். அதைவிட அநாகரிகம் நடித்த நடிகர்களிடம் நட்டஈடு கேட்பது. லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை நட்டம் அடைந்ததாகச் சொல்லப்படும் விநியோகஸ்தர்கள் யாருமே தொழில்முறை விநியோகஸ்தர்கள் அல்ல. அதுதான் இங்கு பிரச்சனை. உண்மையிலேயே நட்டஈட்டை வேந்தர் மூவிஸிடம்தான் இவர்கள் கேட்க வேண்டும். அதைவிடுத்து ரஜினி அவர்களிடம் கேட்பது தவறானது.
லிங்கா படத்தின் மூலம் இலாபம் அடைந்திருந்தால் அதிக இலாபம் அடைந்துவிட்டோம் என்று அந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு எந்த விநியோகஸ்தராவது இலாபத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்களா? அல்லது இலாபம் அடைந்தோம் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்களா? லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் நட்டம் அடைந்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரதம், பிச்சையெடுக்கும் போராட்டம் என்று மிரட்டுவது தொழிலுக்கே எதிரானது. இதில் அரசியல்வாதிகளை இழுப்பது ஆபத்தானது.
பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அடுத்தடுத்த படங்களை வாங்கித்தான் நட்டத்தைச் சரி செய்ய வேண்டுமே தவிர, மிரட்டுவது, பிளாக்மெயில் செய்வது சரியல்ல. அதாவது பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாக இருப்பதாக, தவறாக ஒரு சிலர் கட்சியின் பெயரை திரையுலகில் பயன்படுத்தி வருவதாகக் கேள்விப்படுகிறோம். அப்படிப் பயன்படுத்தினால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கடந்த மாதம் வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பு நடிகர் ரஜினி அவர்களுக்கு எதிராக விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, விநியோகஸ்தர்கள் சார்பாக ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, "எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்துவதற்காக சீமான் வருகிறார், தலைவர் திருமாவளவன் அவர்களும் வரவேண்டும். அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்குமா?" என்று கேட்டார். அதற்கு நான், "இது உங்கள் திரையுலகப் பிரச்சனை. படத்தில் நட்டம் ஏற்பட்டதற்காக நடிகரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்பது முறையானதுமல்ல. எனவே நாங்கள் இதில் தலையிட மாட்டோம்" என்று சொன்னதும் அமைதியாகிவிட்டார்கள்.
ஆகவே, லிங்கா திரைப்படப் பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அது கண்டனத்துக்குரியது. அப்படிப் பயன்படுத்துவது தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை எந்தத் தளத்திலும் ஞாயத்தின் பக்கமே நிற்போம்!”
இந்த விளக்கத்தின் மூலம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விநியோகஸ்தர்கள் பக்கம் இல்லை என்பதும் ரஜினிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதும் புரிகிறது.