ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'அட்டகத்தி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பெங்களூரைச் சேர்ந்த நந்திதா. தொடர்ந்து தமிழில் “எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி” ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் சேதுபதி ஜோடியாக நாயகியாக நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தோடு 'உப்பு கருவாடு' படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
கடந்த எட்டு மாதங்களாக நந்திதாவின் மேனேஜராக பிரதீப் என்பவர் பணியாற்றி வந்தார். தற்போது அவரை நந்திதா நீக்கியுள்ளார், அதோடு இனி நந்திதாவின் கால்ஷீட் விவகாரங்களை அவருடைய பெற்றோர்களே பார்க்க உள்ளார்களாம்.
இது குறித்து நந்திதா கூறியிருப்பதாவது, “அனைத்து மீடியா நண்பர்களுக்கும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் எனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனி, என்னுடைய தேதிகளை பிரதீப் பார்த்துக் கொள்ள மாட்டார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், எட்டு மாதங்களாக என்னுடைய மேனேஜராக அவர் எனக்கு ஆதரவளித்ததற்கு நன்றி. அதனால், தற்காலிகமாக என்னுடைய பெற்றோரே என்னுடைய தேதி விவகாரங்களை கவனித்துக் கொள்வார்கள். என்னுடைய வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் திரையுலகத்தினருக்கும், மீடியா நண்பர்களுக்கும் நன்றி,” எனக் கூறியுள்ளார்.