பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரளாவை காலி செய்கிறார். அவர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறப்போகிறார் என்கிற செய்தி நேற்று (பிப்ரவரி 16) கேரளா முழுவதும் காட்டுத் தீபோல பரவியது. அதற்கு காரணம் மோகன்லால் கேரளாவில் உள்ள தனது அசையா சொத்துக்கள் அனைத்தையும் அடுத்தடுத்து விற்று வருகிறார். இத்தனைக்கும் மோகன்லால் சொந்தப் படம் எடுக்கவில்லை. பெரிய அளவில் அவருக்கு பொருளாதார இழப்பு எதுவும் இல்லை. பணத் தேவையும் இல்லை. அப்படி இருக்கும்போது எதற்காக அடுத்தடுத்து தனது சொத்துக்களை விற்கிறார் என்ற கேள்வி கேரள மக்களிடையே எழுந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள அவரது நவீன ரிக்கார்டிங் ஸ்டூடியோ நகரின் மைய பகுதியில் கேரள சட்டசபைக்கு எதிரே உள்ள 50 செண்ட் இடம், வெள்ளாயணி என்ற புறநகர் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலம் ஆகியவை மோகன்லால் விற்ற முக்கியமான சொத்துக்கள்.
தேசிய விளையாட்டு போட்டியில் மோகன்லால் நடத்திய இசை நிகழ்ச்சி தோல்வி அடைந்ததும், அதற்காக அவரை கேரள ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்ததும், எதிர்கட்சிகள் மோகன்லால் வாங்கி பணத்தை திருப்பி தரவேண்டும் என்று பேசியதும், மோகன்லால் பணத்தை திருப்பிக் கொடுத்ததும் போன்ற நிகழ்ச்சிகள் அவர் மனதை மிகவும் பாதித்திருப்பதாகவும், அதனால் அவர் கேரளாவை காலி செய்து விட்டு தமிழ்நாட்டில் குடியேற இருப்பதாவும் கேரள மக்கள் கருதுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் தனது சமூகவலைதளத்தில் "கேரளா ரத்தபூமியாக மாறிவருகிறது. இங்கு வாழவே பிடிக்கவில்லை" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.