ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ், அமிதாப்புடன் இணைந்து நடித்த 'ஷமிதாப்' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் படத்தில் நடித்த தனுஷுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. வட இந்தியாவில் படத்தைப் பற்றி பலர் பாராட்டினாலும் இந்தப் படம் ஓடிவிடக் கூடாது என்று சில பாலிவுட் நட்சத்திரங்களே உள்ளடி வேலைகள் பார்த்ததாகவும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றிப் பாராட்டினாலும் ஹிந்திப் படமாக இருப்பதால் பலரையும் சென்று இந்தப் படம் சேரவில்லை.
ஆனால், திரையுலகத்தைச் சேர்ந்த பலர் படத்தைப் பார்த்துவிட்டு தனுஷைப் பாராட்டி வருகிறார்களாம். மீண்டும் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு அமைந்துள்ளதாகவும் சொல்கிறகார்கள். ஆனாலும், படத்தில் கதைப்படியே அவருக்கு அமிதாப் குரல் கொடுத்துள்ளதால் அதை விருதுக் குழுவினர் கணக்கில் எடுத்துக் கொள்வார்களா என்பது பின்னர்தான் தெரிய வரும். படத்தைப் பார்த்து சமீபத்தில் பாராட்டியவர்களில் மணிரத்னமும் ஒருவராம். ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்று செய்திகள் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்க, தனுஷின் நடிப்பை மணிரத்னம் பாராட்டியுள்ளது அந்த செய்தியை நிஜமாக்கி விடலாம் என்றும் சிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம்.
மணிரத்னம் இயக்கியுள்ள 'ஓகே கண்மணி' படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகுதான் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை மணிரத்னம் வெளியிடுவார் என்கிறார்கள். அது தனுஷ் நடிக்கும் ஹிந்திப் படமா, அல்லது தமிழ்ப் படமா என்பது அப்போதுதான் தெரியும். அதுவரை செய்திகள் பறந்து கொண்டுதானிருக்கும்.