மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
ஞாபகங்கள், இளைஞன் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பாடலாசிரியர் பா.விஜய். அந்த இரண்டு படங்களுமே அவருக்கு வெற்றியாக அமையவில்லை. அதனால் முழு நேர நடிகராக களமிறங்கிய அவர், பின்னர் பாடல்கள் எழுதிக்கொண்டே நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது பா.விஜய்யின் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராகயிருக்கும் படம் 30 ரூபாய் சிடி. இந்த படத்திற்கு முதலில் தகடு தகடு என்றுதான் பெயர் வைத்திருந்தனர். அதையடுத்து, 30 ரூபாய் சிடியாக மாற்றி விட்டனர். இந்த படத்தில் திருட்டு விசிடி விற்கும் வேடத்தில் நடித்திருக்கிறார் பா.விஜய்.
ஆனால், ஒரு கட்டத்தில், திருட்டு விசிடியினால் கஷ்டப்பட்டு அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எவ்வளவு நஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர் திருந்தி விடுவாராம். அதோடு, திருட்டு விசிடி விற்பனை செய்பவர்களை போலீசுக்கு தகவல் கொடுத்து பிடித்துக்கொடுப்பாராம். அதனால் இந்த படம் வந்தால் பா.விஜய்யை திரையுலகமே கொண்டாடும் என்கிறார்கள். ஆனால், அந்த 30 ரூபாய் சிடி படம் எப்போது ரிலீசாகும்?என்று அந்த படக்குழுவினரிடம் கேட்டால், அதுதான் எங்களுக்கும் புரியாத புதிராக உள்ளது என்கிறார்கள்.