இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை |
அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகி உள்ளது. இந்நிலையில் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தையும் கௌதம் மேனன் இயக்க இருக்கிறார் என்று தகவல் அடிபட ஆரம்பித்தது. அதுமட்டுமல்ல, இப்போது அதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் கௌதம் மேனன் பிசியாக இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து கௌதம் மேனன் தரப்பில் கேட்டபோது, அப்படி ஒரு திட்டம் கௌதம் மேனனுக்கும் இல்லையாம், அஜித்துக்கும் இல்லையாம்! அந்த செய்திகள் வெறும் வதந்தி என்று சொல்கிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி என்னை அறிந்தால் படம் வெளியானதும் சிம்பு நடிக்கும் படத்தின் வேலைகளில் பிசியாகியுள்ளார் கௌதம் மேனன்.
இந்தப் படத்தை முடித்த பிறகுதான் தனது அடுத்த படத்தின் கதை பற்றியும் யார் ஹீரோ என்ற விஷயத்தையும் முடிவு செய்ய உள்ளாராம்! கௌதம் மேனன் கதை இப்படி என்றால்... என்னை அறிந்தால் படம் வெளியான நிலையில் ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஜித்.
அனேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.