கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகி உள்ளது. இந்நிலையில் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தையும் கௌதம் மேனன் இயக்க இருக்கிறார் என்று தகவல் அடிபட ஆரம்பித்தது. அதுமட்டுமல்ல, இப்போது அதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் கௌதம் மேனன் பிசியாக இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து கௌதம் மேனன் தரப்பில் கேட்டபோது, அப்படி ஒரு திட்டம் கௌதம் மேனனுக்கும் இல்லையாம், அஜித்துக்கும் இல்லையாம்! அந்த செய்திகள் வெறும் வதந்தி என்று சொல்கிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி என்னை அறிந்தால் படம் வெளியானதும் சிம்பு நடிக்கும் படத்தின் வேலைகளில் பிசியாகியுள்ளார் கௌதம் மேனன்.
இந்தப் படத்தை முடித்த பிறகுதான் தனது அடுத்த படத்தின் கதை பற்றியும் யார் ஹீரோ என்ற விஷயத்தையும் முடிவு செய்ய உள்ளாராம்! கௌதம் மேனன் கதை இப்படி என்றால்... என்னை அறிந்தால் படம் வெளியான நிலையில் ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஜித்.
அனேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.