இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
'என்னை அறிந்தால்' படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்து விட்டது. படத்தைப் பற்றிக் கொஞ்சம் நெகட்டிவ்வான விமர்சனங்கள் வெளிவந்தாலும் அது படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்கிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் படத்திற்கான வசூல் நன்றாகவே இருந்து வருகிறதாம். அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் உள்ள தியேட்டர்களில் நேற்று மதியக் காட்சிகள் கூட ஹவுஸ்புல் காட்சிகளாக இருந்ததாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரும் போது அந்தப் படங்களைப் பற்றிய வசூலை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதி வருகிறார்கள். எதுவுமே அதிகாரப்பூர்வமாக இல்லாத ஒன்றாக இருந்தாலும் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் லாபம் வருவதற்கான வாய்ப்புதான் அதிகம் இருக்கும் என்றும் நஷ்டம் வர வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால், அடுத்தடுத்து 'அனேகன், காக்கி சட்டை' படங்கள் வெளிவருவதால் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் 'என்னை அறிந்தால்' படத்திற்கான வசூல் குறையலாம் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும், அந்தப் படங்களின் ரிசல்ட்டைப் பொறுத்துத்தான் இந்தப் படத்தின் வசூல் ஏறுவும், இறங்கவும் வாய்ப்புள்ளதாம்.