ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் இந்தக் காலத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒருவரால் பேரும், புகழுடன் இருக்க முடியுமா என்பது ஆச்சரியமான ஒன்றுதான். அந்தக் காலத்தில் பலர் சினிமாவில் நடிக்க முன்வராத சூழ்நிலையில் ஒரு சிலர் மட்டுமே நடிக்க வந்து அவர்களுக்குள் பெரிய போட்டிகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை, நிறைய போட்டிகள், பல தடைகள் அனைத்தையும் கடந்துதான் முன்னணியில் இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நடிகை த்ரிஷா கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார்.
'என்னை அறிந்தால்' படம் வெளிவருவதற்கு முன் த்ரிஷாவைப் பற்றிய திருமண வதந்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது படத்தின் வெற்றியை பாதிக்கும் என படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் சொன்னதாகவும் அதனால் த்ரிஷா, அப்படி எதுவும் இல்லை என்றும் மறுத்தார். ஆனால், படம் வெளிவருவதற்கு முன்பே த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தின் வெற்றி இந்த திருமண விஷயத்தால் பாதிக்கப்படவில்லை. மாறாக படத்தில் இடம் பெற்ற ஹேமானிகா கதாபாத்திரத்தில் த்ரிஷாவுக்கு பாராட்டுக்கள் அதிகமாகத்தான் கிடைத்தது.
'விண்ணைத் தாண்டி வருவாயா' ஜெஸ்ஸியா, இந்த ஹேமானிகாவா , இரு கதாபாத்திரங்களில் கவர்ந்த்து யார் என்றெல்லாம் ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளுவதில் த்ரிஷா அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார். “ஜெஸ்ஸி, ஹேமானிகா பற்றி ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இருவரையும் நீங்கள் ரசிக்கிறீர்களா, இரண்டுமே நான்தானே. 'என்னை அறிந்தால்' பற்றி நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான பாராட்டுக்கள் எனக்கு குவிந்து கொண்டிருக்கின்றன,” எனஅவர் தெரிவித்துள்ளார்.