ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னட இயக்குனர் மதன் பட்டேல், யாரிவானு (யார் இவன்) என்ற படத்தை கன்னடத்தில் இயக்கினார். இது போலி சாமியார் ஒருவரின் கதை. இந்த கதை தன்னை குறிவைத்து எடுக்கப்பட்டதாக கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு இயக்குனருக்கு சாதகமாக வரவே அங்கு படம் ரிலீசானது.
தற்போது இந்தப் படத்தை சொர்க்கம் என் கையில் என்ற தலைப்பில் தமிழில் டப் செய்திருக்கிறார். இதனை சி.என்.என் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. படத்தை தமிழ்நாட்டில் திரையிட்டால் குடும்பத்தோடு கொலை செய்வோம் என்ற நித்யானந்தாவின் ஆட்கள் மிரட்டல் விடுப்பதாக மதன் பட்டேல் கூறினார்.
சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னடத்தில் நான் இயக்கிய யாரிவானு என்ற படத்தை சொர்க்கம் என் கையில் என்ற பெயரில் தமிழில் டப் செய்திருக்கிறேன். இந்தப் படம் போலி சாமியார்களின் திரைமறைவு வேலைகளை சொல்கிற படம். கர்நாடகாவில் தணிக்கை செய்யப்பட்டு அங்கு வெற்றிகரகமாக ஓடியது. ஆனால் படத்தில் நித்யானந்தா சாமியாரை குறிப்பிடுவதாக கருதி தமிழ்நாட்டில் வெளியிட்டால் உன்னை கொலை செய்வோம் என்ற அவரது அமைப்பை சேர்ந்தவர்களும், இன்னும் சிலரும் மிரட்டி வருகிறார்கள்.
எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசையும், போலீசாரையும் கேட்டுக் கொள்கிறேன். படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கி வெளியிட அஞ்சுவதால் நானே 100 தியேட்டர்களில் வெளியிடுகிறேன் என்றார்.