ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்ததோடு, முன்னணி ஹீரோவாகவும் வலம் வருகிறார் பிருத்விராஜ். தமிழில் அவ்வப்போது தலைகாட்டினாலும் தன்னுடைய தனி முத்திரையை பிருத்விராஜ் பதிக்கத்தவறியதே இல்லை. கடைசியாக பிருத்விராஜ் நடித்த தமிழ்ப்படம் காவியத்தலைவன். அந்தப் படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். காவியத்தலைவன் வெற்றியடைந்தால் தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அப்படம் தோல்வியடைந்த காரணத்தினால் தன் கவனத்தை மலையாளப்பக்கமே மீண்டும் திருப்பிவிட்டார்.
அங்கே படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் பிருத்விராஜ் தற்போது அனார்கலி என்ற படத்தில் நடிக்கிறார். சச்சி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஆழ் கடல் டைவிங் பயிற்சியாளராக நடிக்க உள்ள பிருத்விராஜ், இதற்காக தற்போது சிறப்புப் பயிற்சி எடுத்து வருகிறார்! இந்த படத்தின் படப்பிடிப்பு லட்சத்தீவு பகுதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக மியா, பாயல் கோஷ் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான் ராஜீவ் மேனன் மற்றும் பாலிவுட் நடிகர் கபீர் பேடி ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.