சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் நேற்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 தியேட்டர்ளில் ரிலீஸ் ஆனது. ஓப்பன் கிங்கான அஜீத்துக்கு என்னை அறிந்தால் படத்துக்கும் மாஸ் ஓப்பனிங் கிடைத்தது. பல ஊர்களில் அதிகாலையிலேயே ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்தார்கள். பல ஊர்களில் ரசிகர்கள் ஊர்வலமாக தியேட்டருக்குச் சென்று பட்டாசு கொழுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இதன் உச்சகட்டமாக சேலம் ரசிகர்கள் சுமார் 4 அடியில் அஜீத்தின் சிலையை பிளாஸ்டர் பாரிசில் உருவாக்கி அதனை வேன்மீது வைத்து சாமி ஊர்வலம் போன்று நடத்தினார்கள்.அஜீத்தின் இன்றைய தாடி கெட்-அப்புடன் இந்த சிலை உருவாக்கப்பட்டிருந்தது.
மதுரை ரசிகர்கள் போஸ்டர் பிரியர்கள். அவர்கள் அஜீத்தை விதவிதமான உருவங்களுடன் போஸ்டரா அச்சடித்து நகரம் முழுவதும் ஒட்டியிருந்தார்கள். அதில் அவரை திருவள்ளுவராக சித்தரித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. "ஈரடி திருக்குறள் நன்மைகளை சொல்லும், தல என்ற இரு எழுத்து அந்த திருக்குறளையே சொல்லும்" என்று பன்ச் போட்டியிருந்தார்கள். இதை அச்சடித்தவர்கள் அடங்காத அஜீத் குரூப்ஸ்சாம்.
அஜீத் மன்றத்தை கலைத்தாலும் அஜீத் ரசிகர்கள் தங்கள் சிந்தனையை கலைக்க மாட்டார்கள் போலும். ஆனாலும், அவர்கள் கொடுத்திருக்கும் 'பன்ச்' கொஞ்சம் ஓவர் தான்.