அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
'ஜெனரேஷன் சேன்ஞ்' எனப்படும் தலைமுறை மாற்றம் என்பது எல்லா தொழிலிலும் தவிர்க்க முடியாத ஒன்று. காலம் மாற மாற அது பல இடத்தில் அதன் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். திரையுலகில் அது இன்னமும் அதிகமாக இருக்கும். எப்போதோ ஒரு சமயத்தில் அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதை யாராலும் தடுக்க முடியாது தவிர்க்கவும் முடியாது. 40 ஆண்டு காலமாக தென்னிந்திய மொழிகளில் பின்னணிப் பாடகராக இருந்து கொண்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஆமோதிக்கிறார். 'மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை,' என்கிறார்.
“முன்பைப் போல நான் நிறைய பாடல்கள் பாடுவதில்லை. எனக்கு யார் வாய்ப்பு தருகிறார்களோ, அவர்களுக்காகப் பாடுகிறேன். மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளில் பாடும் போது ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகம் திருப்தியைக் கொடுக்கிறது. இன்னும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் காட்டும் அன்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் அறிமுகமான போது சிறிய ஹீரோக்களுக்கு மட்டும்தான் பாடிக் கொண்டிருந்தேன். அதன் பின்தான் பெரிய ஹீரோக்களுக்குப் பாட ஆரம்பித்தேன். மாற்றங்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இப்போது பாடும் இளைஞர்களெல்லாம் இனிமையாகவே பாடுகிறார்கள். எங்களை விட அவர்கள் திறமைகளில் குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் மிகவும் திறமையானவர்கள் நன்றாகவும் பாடுகிறார்கள். இப்போது என்னை யாராவது பாட வேண்டும் என்று அணுகினால், அவர்கள் என்னை எதற்கு பாட அழைக்கிறார்கள் என்ற காரணத்தைத் தெரிந்து கொண்டுதான் பாடுகிறேன்.
எல்லா பாடல்களையும் நம்மால் பாட முடியாது, ஆனால் கடந்த காலங்களில் நான் பாடிய பாடல்கள் இன்னும் பத்து தலைமுறைகள் ரசித்துக் கேட்கும்படி இருக்கும். அதுவே எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சி தரக் கூடியதாகவும் இருக்கும், அதை எதுவும் தட்டிப் பறித்துவிட முடியாது. என்னால் முடிந்த வரைக்கும் பாடுவேன், அதற்கு ஆண்டவன் என் மீது கனிவாக இருப்பார் என நம்புகிறேன், ” என எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.