ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை சத்யராஜ்தான் அதிக உயரமான நடிகராக நீண்டகாலமாக இருந்து கொண்டிருந்தார். அவருடன் நடித்த பல ஹீரோக்கள் அவரை அண்ணாந்து பார்த்துதான் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான நெப்போலியன் அவரை விட உயரமாக இருந்தார். அதனால் கோடம்பாக்கத்தில் அதிக உயரமான நடிகர் என்ற இடத்தில் இருந்த சத்யராஜை பின்தள்ளி முதல் உயரமான நடிகராக திகழ்ந்து கொண்டிருநதார் நெப்போலியன்.
ஆனால், இப்போது சகாப்தம் படத்தில் நடித்துள்ள விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன், உயரத்தில் அவர்கள் இரண்டு பேரையுமே மிஞ்சி விட்டார். அதாவது 6.4 இருக்கிறார். அந்த வகையில், இந்தி நடிகர் அமிதாப் பச்சனை எட்டிப்பிடித்து விட்டார் சண்முகப்பாண்டியன். அதனால் சகாப்தம் படத்தின் ஆடியோ விழாவில் அமிதாப் பச்சனை முன்மாதிரியாக கொண்டு சண்முகப்பாண்டியன் நடிக்க வேண்டும் என்று சிலர் அவரை வாழ்த்தி பேசினார்கள்.
மேலும், சண்முகப்பாண்டியனை வாழ்த்தி பேசும்போது அவரை தங்கள் அருகே அழைத்த சத்யராஜ்-நெப்போலியன் இருவருமே அவர் தங்களை விட உயரமாக இருக்கிறார் என்பதை அருகில் நின்று பார்த்துக்கொண்டனர். அந்த வகையில், சத்யராஜ், சற்று தலையை தூக்கித்தான் சண்முகப்பாண்டியனின் முகத்தை பார்த்தார். அந்த அளவுக்கு உயரமாக இருந்தார் சண்முகப்பாண்டியன்.